ஏஐ (AI) என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு புரட்சிகரமானது, மனித மூளையை விஞ்சக்கூடியது, மனிதனை அடிமையாக்கிவிடும், அல்லது அழித்துவிடும் என்றெல்லாம் முழங்கப்படுகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவுகளைத்தரும் முறையின் நீட்சியே ஏஐ. இதுவரை அந்த முறையில் முடிவுகள் எந்த சூழலுக்கு பொருந்தும் என்னென்ன மாறிலிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் இருந்தன.ஆனால் செயற்கை நுண்ணறிவில் இவையெல்லாம் காற்றில் பறக்க விடப்படுகின்றன. கோடிக்கணக்கான வார்த்தைகளை உள் செலுத்தி அதிலிருந்து தொகுத்துக் கொடுப்பதையே சாட் ஜிபிடி போன்றவை செய்கின்றன. ‘நியூரல் நெட்ஒர்க்’ போன்ற சொற்களை பயன்படுத்தி இது மனித மூளைக்கு இணையானது என்கிற தோற்றத்தை கொடுக்கிறார்கள். உண்மையில் இது மனித மூளையைப் போல் வேலை செய்யாது. எதார்த்தத்தில் நிலைமைகள் சிக்கலானவை. புள்ளிவிவரங்களின் நீட்சி பல இடங்களில் தவறாகப் போய்விடும். எடுத்துக்காட்டாக தண்ணீர் வெப்பநிலை அதிகரிக்கும்போது கன அளவு கூடும்.குறையும்போது குறையும்.ஆனால் 4டிகிரிக்கு கீழ் குறைக்கும்போது கன அளவு கூடுகிறது. இதை ஏஐயினால் கணிக்க இயலாது. சமூக ஊடகங்கள், காணொளி பரப்பு ஆகிய பயனாளர்களைக் குறிவைத்தே இது விளம்பரப்படுத்தப்படுகிறது. இதனால்தான் சாட்ஜிபிடி, கூகுளின் பார்ட் (BART), பெர்ட் (BERT) போன்றவை ‘புள்ளிவிவரங்களை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்கிறார் கணக்கீட்டு மொழியியலாளர் எமிலி பெண்டர். கூகுளைச் சேர்ந்த அவருடைய சக கட்டுரையாளர்கள் டிம்னிட் கெப்ளர், மார்கரெட் மிட்செல் ஆகியோர் இந்தக் கட்டுரையிலிருந்து விலகுமாறு கட்டளையிடப்பட்டனர். அவர்கள் மறுத்ததினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதுதான் முதலாளித்துவ சுதந்திரம். ஏஐ–யினால் ஆளில்லா கார் ஓட்டுவது கூட இன்னும் சாத்தியமாகவில்லை. ஏஐயினால் ஆலைத் தொழிலாளிகள் வேலை இழப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புக்கு மாறாக பதிவு செய்யப்பட்ட உரையை எழுத்திற்கு மாற்றுவது, சுமாரான மொழிபெயர்ப்புகள், கால் சென்டர் பணிகள் போன்ற ஒயிட் காலர் பணிகளே ஏஐயினால் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் ஏஐ–யின் வழியாக எடுக்கப்படும் முடிவுகளால் நலிந்த பிரிவினரின் இன்ஷூரன்ஸ், மருத்துவம், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. வெறுப்பு ஆனால் உரைகளை சமூக ஊடகங்களில் பரப்ப உதவுகிறது என்பது நாம் அறிந்த உண்மை. ‘தீயவைகளின் அற்பத்தனத்தைப் போல ஜாட்ஜிபிடி காப்பியடிப்பது, சுரணையின்மை, ஊக்கமின்மை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. என்று புகழ் பெற்ற மொழியியலாளர் நாம் சோம்ஸ்கி கூறுவது மிகச் சரியாக உள்ளது. – பீப்பிள்ஸ் டெமாக்கரசி (மார்ச் 27 - ஏப்ரல் 2 இதழ்) பாப்பா சின்கா கட்டுரையிலிருந்து.